சாரணர்களுக்கு ஆளுநரின் ராஜ்ய புரஷ்கார் விருது வழங்குவதற்கான தேர்வு முகாம் திருச்செங்கோடு வித்யா விகாஸ் பொறியியல்- தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
முகாமை கல்வி நிறுவன நிர்வாகிகள் டி.ஓ.சிங்காரவேல், எஸ்.குணசேகரன், எஸ்.இராமலிங்கம்,எம்.முத்துசாமி ஆகியோர் துவக்கி வைத்தனர். நாமக்கல், கோயம்புத்தூர், கடலூர், கன்னியாகுமரி, சென்னை, காஞ்சிபுரம், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சாரணர்கள் 130 பேர் கலந்து கொண்டனர்.
நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரும் மாவட்ட முதன்மை ஆணையருமான ப.உஷா, கல்வி நிறுவன முதல்வர் பூர்ணபிரியா, மாவட்ட தலைமையிட ஆணையர்.பி.வி.குமார், பயிற்சி ஆணையர் ராஜன், சங்கீதா (தென்னக ரயில்வே) சக்தி கைலாஷ் (கோவை), சாரணர் இயக்கத்தின் திருச்செங்கோடு கல்வி மாவட்டச் செயலர் து.விஜய், ரகோத்தமன்
உள்ளிட்டோர் பங்கேற்றனர்.