நாமக்கல்

பரமத்தி வேலூர் அருகே லாரி மோதியதில் தொழிலாளி பலி

DIN

பரமத்தி வேலூர் எஸ்.வாழவந்தி அருகே லாரி மோதிய விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற கூலித்தொழிலாளி உயிரிழந்தார். 
எஸ்.வாழவந்தி அருகே உள்ள வள்ளியப்பம்பட்டி காலனியைச் சேர்ந்தவர் கருப்பண்ணன் (65). இவர் தனது இரு சக்கர வாகனத்தில் முட்டைகளை  கொண்டு சென்று கொண்டிருந்தார். அப்போது வள்ளிபுரத்தில் இருந்து எஸ்.வாழவந்திக்கு முட்டை ஏற்ற வந்த லாரி, கருப்பண்ணன் வந்த இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது.  இதில் கருப்பண்ணன் நிகழ்விடத்திலேயே பலியானார். விபத்து நடந்த இடம் மோகனூர் காவல் நிலையத்துக்கு உள்பட்டதா அல்லது பரமத்தி காவல் நிலையத்துக்கு உள்பட்டதா என தெரியதாததால் சுமார் நான்கு மணி நேரம் இறந்தவரின் உடலை மீட்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் நிகழ்விடம் எஸ்.வாழவந்தி அருகே உள்ள அரியானுத் பகுதி பரமத்தி காவல் நிலையத்துக்கு உள்பட்டது என தெரியவந்தது. பின்னர் இறந்தவரின் உடலை பரமத்தி போலீஸார் மீட்டு, உசிலம்பட்டி அருகே உள்ள சீரங்கம்பட்டியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பிரபாகரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

48 வயதினிலே..

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

SCROLL FOR NEXT