நாமக்கல் மாற்றுக் கட்சியினர் 500க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
நாமக்கல் கிழக்கு மாவட்டம் நாமக்கல் நகரம், என்.கொசவம்பட்டி 12-ஆவது வார்டு பகுதியைச் சேர்ந்த மாற்றுக்கட்சியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் அண்மையில் அக்கட்சியில் இருந்து விலகி, மல்லாயி (எ)கே.எம்.எஸ்.செளந்தராஜன் தலைமையில்
மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் மத்திய இணையமைச்சருமான செ.காந்திசெல்வன், நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளரும், தேர்தல் பணிக்குழுச் செயலாளருமான எஸ்.ஆர்.பார்த்திபன், நகர பொறுப்பாளர் ராணா ஆர்.ஆனந்த் ஆகியோர் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் இரா.உடையவர், தலைமைச் செயற்குழுஉறுப்பினர் பவித்திரம் கண்ணன், மாநில நிர்வாகி இரா.நக்கீரன், ஒன்றியச் செயலாளர்கள் பாலு (எ) பாலசுப்ரமணியம், வி.கே.பழனிவேல், எம்.பி.கெளதம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.