நாமக்கல்

தனியார் வங்கியில் தீ விபத்து

DIN


வையப்பமலையில் இயங்கி வரும் தனியார் வங்கிக் கிளையில் ஏற்பட்ட தீ விபத்தில், பொருள்கள் சேதம் அடைந்தன.
திருச்செங்கோடு அருகேயுள்ள வையப்பமலையில் உள்ள தனியார் வங்கிக் கிளையில் திங்கள்கிழமை இரவு 11 மணியளவில் கரும்புகை வெளிவந்துள்ளது.
இதையறிந்த கிராம மக்கள்அளித்த தகவலின்பேரில், ராசிபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். 
இதைத் தொடர்ந்து, வங்கியின் மேலாளர் சமீர் உள்ளே சென்று பார்த்தபோது, கணினிகள், குளிர்சாதனப் பெட்டிகள், தளவாடப் பொருள் தீயில் கருகி எரிந்துள்ளன. ஆனால், பணமும், அடமான நகைகள் தீ விபத்தில் சேதமடையவில்லை.
தீ விபத்துக்கான காரணம் குறித்து எலச்சிபாளையம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்துவருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவின் திட்டமிட்ட சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

SCROLL FOR NEXT