நாமக்கல்

சத்தான உணவு குறித்து தேசிய அளவிலான போட்டி: மாணவர்களுக்கு அழைப்பு

DIN

பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் தேசிய அளவிலான சத்தான உணவு என்ற தலைப்பில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையத்தால், மகாத்மா காந்தி 150-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, இந்தியா முழுமைக்கும் நடத்தப்படும் தேசிய அளவிலான, சரியான, சத்தான சரிவிகித உணவு என்னும் மையக்  கருத்தினைக் கொண்டு அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் நுகர்வோர்கள் பங்குபெறும் வகையில், உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு தொடர்பாக ஓவியம், சுவரோவியம், டிஜிட்டல் கலை போட்டிகள் உள்ளிட்ட போட்டிகள் உணவு பாதுகாப்புத் துறையின் சார்பில் நடத்தப்பட உள்ளன.
இதில் முதல் கட்டமாக இந்தப் போட்டிகளை பள்ளி அளவில் நடத்த விரும்பும் பள்ளிகள் அனைத்தும் h‌t‌t‌p‌s://‌f‌s‌s​a‌i.‌g‌o‌v.‌i‌n/
​c‌r‌e​a‌t‌i‌v‌i‌t‌y​c‌h​a‌l‌l‌e‌n‌g‌e என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். பள்ளி அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவியர் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளலாம். 
போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்படும் போஸ்டர்கள் தேசிய அளவிலான தேர்வுக்கு அனுப்பப்படும்.  எனவே, ஆரோக்கியமான இந்தியாவினை உருவாக்கும் நோக்கில் செயல்படுத்தப்படும் இந்த போட்டிகளில் மாணவ, மாணவியர் தத்தம் பள்ளிகளின் மூலம் தங்களது பெயரினை பதிவு செய்து கலந்து கொள்ளலாம். டிஜிட்டல் போட்டிக்கு பள்ளி மாணவர்கள் மட்டுமன்றி, கல்லூரி மாணவ, மாணவியரும் பங்கு பெறலாம். மேலும் விவரங்களுக்கு நாமக்கல் மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறை நியமன அலுவலர் அலுவலகத்தை 04286-281242 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT