நாமக்கல்

ஸ்ரீ சீரடி சாய்பாபா கோயிலில் திருக்குட நன்னீராட்டு விழா

DIN

குமாரபாளையத்தை அடுத்த எம்ஜிஆர் நகர், பூலக்காடு அருகே கட்டப்பட்டுள்ள ஸ்ரீ சீரடி சாய்பாபா கோயிலில் திருக்குட நன்னீராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. 
விழாவை முன்னிட்டு கோயில் வளாகத்தில் கடந்த வியாழக்கிழமை முளைப்பாலிகை இடுதல், ஞாயிற்றுக்கிழமை முகூர்த்தக்கால் நடுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து, விநாயகர் வழிபாடு, திருவிளக்கு வழிபாடு, யாகசாலை வேள்விகள் திங்கள்கிழமை நடைபெற்றன. தொடர்ந்து, திருக்குட நன்னீராட்டு செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. 
இந்த வழிபாட்டினை சாந்தலிங்கர் நெறிமன்ற நிர்வாகி நா.சுந்தரமூர்த்தி, தஞ்சை முத்துக்குமார சுவாமி குழுவினர் நடத்தினர். இந்நிகழ்ச்சியில், குமாரபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஷி ஜோ!

கூலி - இளையராஜா நோட்டீஸ்!

குடியரசுத் தலைவரின் முதல் வருகை! முழுவீச்சில் தயாராகும் அயோத்தி ராமர் கோவில்!

இளைஞர்களுக்கு வழிகாட்டியாக மாறிய ஸ்ரீமதி: தமிழக அரசு பாராட்டு

அரசியல் கட்சிகள் தண்ணீர்ப் பந்தல்கள் அமைக்க அனுமதி!

SCROLL FOR NEXT