பாண்டமங்கலம் அருகே கோப்பணம்பாளையம் மாசாணியம்மன் கோயிலில் சிறப்பு மிளகாய் யாகம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
கோப்பணம்பாளையத்தில் மாசாணியம்மன், அங்காளபரமேஸ்வரி, அரசாயி அம்மன் மற்றும் பேச்சியம்மன் தெய்வங்கள் ஒரே கோயில் வளாகத்தில் அமைந்துள்ளன.
இந்தக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை இரவு மாசாணி அம்மனுக்கு சிறப்பு மிளகாய் யாகம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் சிறப்பு அலங்காரமும் நடைபெற்றன. இதில் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று யாகத்தில் மிளகாய்களைப் போட்டு நேர்த்திக் கடனை செலுத்தினர். ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழுவினர், ஊர் மக்கள் செய்திருந்தனர்.