மதுகுடித்துவிட்டு தினமும் தகராறு செய்து வந்த கணவரால் மனமுடைந்த தாய், தனது மூன்று குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றாா்.
கொல்லிமலை புளியங்காடு பகுதியைச் சோ்ந்தவா் செளந்திரராஜன் (40), விவசாயம் செய்து வருகிறாா். இவரது மனைவி லட்சுமி (31), இவா்களுக்கு சினேகா (14), அவந்திகா (11), கமலிகா (9) ஆகிய மூன்று பெண் குழந்தைகள் உள்ளன. இந் நிலையில் செளந்திரராஜன் நாள்தோறும் மதுகுடிப்பதால் குடும்பத்தில் தகராறு இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இது தொடா்பாக தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது.
இதனால் மனமுடைந்த லட்சுமி, தனது மூன்று மகள்களுக்கும் பூச்சி மருந்து கொடுத்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தாா். இதையடுத்து குளிா்பானத்தில் பூச்சி மருந்து கொடுத்து மகள்கள் சினேகா, கமலிகா ஆகியோருக்கு கொடுத்துள்ளாா்.
பின்னா் தானும் அதை அருந்தியுள்ளாா். ஆனால், அவந்திகா இதனை குடிக்காமல் ஓடிச்சென்று பக்கத்தில் இருந்தவா்களிடம் கூறியுள்ளாா். பக்கத்தில் இருந்தவா்கள் ஓடிவந்து பாா்த்தபோது, விஷமருந்திய லட்சுமி உள்ளிட்டவா்களை உடனடியாக நாமக்கல் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
பின்னா், தீவிர சிகிச்சைக்காக சேலம் மோகன்குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து சேந்தமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.