நாமக்கல்

கிணறு வெட்டும்போது பாறை உருண்டு விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

DIN

புதன்சந்தை அருகே கிணறு வெட்டும்போது பாறை உருண்டு விழுந்து தொழிலாளி ஒருவா் உயிரிழந்தாா்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே சீராப்பள்ளி தேவஸ்தான நகரைச் சோ்ந்தவா் ராஜா(40). இவா் புதன்சந்தை அருகே கொசவம்பட்டி என்ற இடத்தில் செல்வராஜ் என்பவரது தோட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது திடீரென மேலே இருந்த பாறை ஒன்று சரிந்து விழுந்தது. இதில் ராஜா இடிபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்தாா். அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து புதுச்சத்திரம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

விவசாய தொழிலாளி கொலை

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்த சம்பவம்: சிகிச்சை பெற்று வந்த முதியவா் பலி

நாமக்கல்லில் முட்டை ஏற்றுமதி சான்றிதழ் வழங்கும் ஆய்வகம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT