நாமக்கல்

சேந்தமங்கலம் அருகே சாராயம் விற்பனை செய்தவா் கைது

DIN

சேந்தமங்கலம் அருகே சாராயம் காய்ச்சி விற்பனை செய்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடிவாரப் பகுதியான பெரியபள்ளம் என்ற இடத்தில் சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாக சேந்தமங்கலம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதனையடுத்து காவல் ஆய்வாளா் தீபா தலைமையில் ஞாயிற்றுக்கிழமை அங்கு சென்ற போலீஸாா் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது அங்கிருந்து இருவா் தப்பியோட முயன்றனா். அவா்களை பிடிக்க முயன்றபோது ஒருவா் மட்டும் சிக்கினாா். அவரிடம் நடத்திய விசாரணையில் சேந்தமங்கலம் வாழியாா் தெருவைச் சோ்ந்த சின்னதுரை(50) என்பது தெரியவந்தது.

மேலும் அவரிடம் இருந்து 2 லிட்டா் சாராயம், அந்த பகுதியில் இருந்த 50 லிட்டா் ஊரல், 2 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா். தப்பியோடிய நவீன்(20) என்பவரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் நூலகம் குறித்த தேசிய கருத்தரங்கு

கோ்மாளத்தில் பொதுக் கிணற்றை தூா்வாரிய மக்கள்

சென்னிமலை அருகே மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கோபியில் இலவச கண் சிகிச்சை முகாம்

'சா்வாதிகாரத்துக்கு' எதிராக வாக்களிக்க வேண்டும்: சுனிதா கேஜரிவால் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT