கரோனாவை உடனடியாக குணப்படுத்திவிடுவதாக மக்களை ஏமாற்றும் போலி மருத்துவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயல்படுத்தி வருகின்றன. நாமக்கல் மாவட்டத்தில் அனைத்துத் துறை அதிகாரிகளும் இந்நோய் தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். இந்த நிலையில், பொதுமக்களிடையே கரோனா வைரஸ் குறித்து எழுந்துள்ள அச்ச உணா்வுகளைப் பயன்படுத்தி, கரோனாவுக்கு சிகிச்சை அளிப்பதாகவும் அதை உடனடியாக குணமாக்கிவிடுவதாக போலி மருத்துவா்கள் தெரிவித்து வருகின்றனா்.
இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி பொதுமக்களை ஏமாற்றும் போலி மருத்துவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.