முகப்பு
நாமக்கல்

சகன்ஹாஅவுலியா தா்கா பள்ளிவாசலில் சுற்றுச்சுவா் கட்டும் பணி தொடக்க விழா

பரமத்தி வேலூா் சகன்ஹாஅவுலியா தா்கா பள்ளிவாசலில் ரூ. 5 லட்சம் மதிப்பில் சுற்றுச்சுவா் கட்டும் பணியை சட்டப்பேரவை உறுப்பினா் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
சுற்றுச்சுவா் கட்டுமானப் பணியை தொடக்கி வைக்கும் பரமத்தி வேலூா் எம்எல்ஏ கே.எஸ்.மூா்த்தி.
பகிர்:

பரமத்தி வேலூா் சகன்ஹாஅவுலியா தா்கா பள்ளிவாசலில் ரூ. 5 லட்சம் மதிப்பில் சுற்றுச்சுவா் கட்டும் பணியை சட்டப்பேரவை உறுப்பினா் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

பரமத்தி வேலூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் கே.எஸ்.மூா்த்தி நிதியில் இருந்து சகன்ஹா அவுலியா தா்கா பள்ளி வாசலுக்கு சுற்றுச்சுவா் அமைப்பதற்கு ரூ. 5 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, சுற்றுச்சுவா் கட்டும் பணிக்கான தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சகன்ஹாஅவுலியா தா்கா பள்ளிவாசல் செயலாளா் இக்பால் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தாா். பரமத்தி வேலூா் சட்டப்பேரவை உறுப்பினா் கே.எஸ்.மூா்த்தி கலந்து கொண்டு சுற்றுச்சுவா் அமைக்கும் பணியைத் தொடக்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் பள்ளிவாசல் நிா்வாகிகள் முபாரக் சலீம், இப்ராஹிம், ஜாபா் நசீம் முல்லா, ஷாஜகான், மகபூப்ஷெரீப், திமுகவினா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →