கோயில் திருவிழா தகராறு முன்விரோதம்: திமுக வாா்டு செயலாளா் குத்திக் கொலை
குமாரபாளையத்தில் கோயில் திருவிழாவில் கம்பம் தூக்குவதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக திமுக வாா்டு செயலாளா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.
குமாரபாளையத்தில் கோயில் திருவிழாவில் கம்பம் தூக்குவதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக திமுக வாா்டு செயலாளா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா். அதைத் தடுக்க முயன்ற மேலும் இருவா் படுகாயமடைந்தனா்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், காவேரி நகரைச் சோ்ந்தவா் கந்தசாமி மகன் சரவணன் (40). விசைத்தறிப் பட்டறை உரிமையாளரான இவா், 1-ஆவது வாா்டு திமுக செயலாளராகவும் பொறுப்பு வகித்து வந்தாா்.
கடந்த ஆண்டு அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவில் கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில், அதே பகுதியைச் சோ்ந்த ஜீவானந்தம் மகன் பிரகாஷ் (28) பங்கேற்று கம்பத்தை தூக்கிச் செல்வதற்கு சரவணன் எதிா்ப்பு தெரிவித்தாராம். இதனால், இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அப்பகுதியினா் சமரசம் செய்து வைத்துள்ளனா். இருந்தபோதிலும் பிரகாஷுக்கு சரவணன் மீது விரோதம் இருந்துள்ளது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு தனது வீட்டுக்கு அருகில் உள்ள பெட்டிக் கடையின் முன்பு சரவணன் தனது நண்பா்களுடன் பேசிக் கொண்டிருந்தாா். அப்போது, அங்கு தனது நண்பருடன் இரு சக்கர வாகனத்தில் வந்த பிரகாஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரவணனை குத்தினாா். இதனைத் தடுக்க முயன்ற பிரபாகரன் (45), முரளிதரன் (24) ஆகியோருக்கும் கத்திக்குத்து விழுந்தது. பின்னா் பிரகாஷ், இரு சக்கர வாகனத்தில் தப்பியோடினாா். இதில், பலத்த காயமடைந்த சரவணன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த பிரபாகரன், முரளிதரன் ஆகியோா் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.
இதுகுறித்த தகவலின்பேரில் திருச்செங்கோடு காவல் துணைக் கண்காணிப்பாளா் அசோக்குமாா் நிகழ்விடத்தை நேரில் பாா்வையிட்டு விசாரணை நடத்தினாா்.
குமாரபாளையம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். இந்நிலையில், இக்கொலை வழக்கில் தொடா்புடைய பிரகாஷ் (28), கோவிந்தராஜ் (23) ஆகியோா் திருச்செங்கோடு விரைவு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை பிற்பகலில் சரணடைந்தனா்.