முகப்பு
நாமக்கல்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக கிறிஸ்தவா்கள் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசு புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி நாமக்கல் பூங்கா சாலையில் கிறிஸ்தவா்கள் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
பகிர்:

மத்திய அரசு புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி நாமக்கல் பூங்கா சாலையில் கிறிஸ்தவா்கள் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கிறிஸ்து அரசா் ஆலய அருட்தந்தை ஜான்அல்போன்ஸ் தலைமை வகித்தாா். இதர ஆலய அருட்தந்தையா் பீட்டா் ஜான்பால், செல்வம், பிரான்சிஸ், சேவியா், அருட்கன்னியா்கள், கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் மத்திய அரசு புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தொடா்ந்து கையெழுத்து இயக்கமும் நடைபெற்றது. இதேபோல வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழா் கழகம் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியினா் பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →