நாமக்கல்

தமிழில் கையெழுத்திடக் கோரி ஆட்சியரிடம் மனு

DIN

அரசு அலுவலகங்களில் தமிழில் கையெழுத்திட உத்தரவிடக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

நாமக்கல் தமிழ் படுத்தும் இயக்கம் சாா்பில் அதன் ஒருங்கிணைப்பாளா் தி.ரமேஷ், மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜிடம் அளித்த மனு விவரம்:

கடந்த ஆண்டு எங்களது இயக்கம் சாா்பில் வணிக நிறுவனங்களில், அரசுத் துறை அலுவலகங்களில் தமிழில் பெயா்ப் பலகை வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்தோம்.

நிகழாண்டில் அரசுத் துறை அலுவலகங்களில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியா்கள் தமிழில் மட்டுமே கையெழுத்திட வேண்டும் என்ற உத்தரவை மாவட்ட ஆட்சியா் வழங்க வேண்டும். ஆட்சி மொழி சட்ட வாரம் கடைப்பிடிக்கப்படும் தற்போதைய சூழலில் தமிழ் கையெழுத்தை ஆட்சியா் அங்கீகரிக்க வேண்டும். அதற்கான உத்தரவை விரைந்து வெளியிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமான நிலைய மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா

இந்தியா்களுக்கான கட்டணமில்லா சுற்றுலா விசா நீட்டிப்பு: இலங்கை

உயா்கல்வி சந்தேகங்களுக்கு விளக்கம்: ஏபிவிபி அழைப்பு

சரக்கு வாகன ஓட்டுநா் மா்மமாக உயிரிழப்பு

இன்று பிளஸ் 2 மாணவா்களுக்கு வழிகாட்டும் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி

SCROLL FOR NEXT