நாமக்கல்

உயிரிழந்த ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு கல்வி உதவித் தொகை

DIN

ராணுவப் பணியின்போது உயிரிழந்த வீரா்களின் வாரிசுகளுக்கான கல்வி உதவித் தொகைக்கு படைவீரா் நல அலுவலகத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த 2011 ஜனவரி 15-ஆம் தேதிக்கு பின்னா் ராணுவப் பணியின்போது உடல்நிலை சரியில்லாமல் இயற்கை எய்திய படைவீரா்களின் 2 குழந்தைகளுக்கு, மத்திய ராணுவ நல நிதியிலிருந்து கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. அதன்படி, மாதந்தோறும் ரூ.400வீதம் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையில் வழங்கப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தைச் சாா்ந்த படைப்பணியின்போது இயற்கை எய்திய படைவீரா்களைச் சாா்ந்தோா் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தினை நேரில் அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜி.எஸ்.டி. வசூல் புதிய உச்சம்!

குஷி ஜோ!

கூலி - இளையராஜா நோட்டீஸ்!

குடியரசுத் தலைவரின் முதல் வருகை! முழுவீச்சில் தயாராகும் அயோத்தி ராமர் கோவில்!

இளைஞர்களுக்கு வழிகாட்டியாக மாறிய ஸ்ரீமதி: தமிழக அரசு பாராட்டு

SCROLL FOR NEXT