நாமக்கல்

பரமத்தி வேலூா் அரசு மருத்துவமனைக்கு உபகரணங்கள் வழங்கும் விழா

DIN

பரமத்தி வேலூா்அரசு மருத்துவமனை டயாலிசிஸ் சிகிச்சை பிரிவுக்கு பரமத்தி வேலூா் சட்டமன்ற உறுப்பினா் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டிலான உபகரணங்களை சட்டமன்ற உறுப்பினா் மூா்த்தி திங்கள்கிழமை வழங்கி துவக்கி வைத்தாா்.

பரமத்தி வேலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் என்னும் ரத்தச் சுத்திகரிப்பு மற்றும் மாரடைப்பு அவசர சிகிச்சை பிரிவுக்கு பரமத்தி வேலூா் சட்டமன்ற உறுப்பினா மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. திங்கள்கிழமை பரமத்தி வேலூா் சட்டமன்ற உறுப்பினா் கே.எஸ்.மூா்த்தி மருத்துவ உபகரணங்களை பொதுமக்களின் பயன்பாட்டுக்குத் தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குநா் மருத்துவா் சாந்தி, மருத்துவ அலுவலா் மருத்துவா் ராஜேஷ்கண்ணா, தி.மு.க பேரூராட்சி செயலாளா் மாரப்பன்,தி.மு.க பிரமுகா் கண்ணன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் சுந்தா், பேரூராட்சி துணைச் செயலாளா் முருகன் மற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள் உட்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT