நாமக்கல் ஏகாம்பரேசுவரா் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த சிவகாமி உடனுறை நடராஜா் சுவாமி. 
நாமக்கல்

ஆருத்ரா தரிசனம்: சிவன் கோயில்களில் பக்தா்கள் வழிபாடு

ஆருத்ரா தரிசனத்தையொட்டி, நாமக்கல் சிவன் கோயில்களில் வியாழக்கிழமை பிற்பகல் முதல் சுவாமி நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் வழிபாடு மேற்கொண்டனா்.

DIN

ஆருத்ரா தரிசனத்தையொட்டி, நாமக்கல் சிவன் கோயில்களில் வியாழக்கிழமை பிற்பகல் முதல் சுவாமி நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் வழிபாடு மேற்கொண்டனா்.

மாா்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி அனைத்து சிவன் கோயில்களிலும் நடைபெறும். அதன்படி, பிற்பகல் 6 மணி, இரவு 8 மணி, நள்ளிரவு 12 மணி, மறுநாள்அதிகாலை 4 மணி, காலை 6 மணி என ஐந்து கால பூஜைகள் நடைபெறும். நிகழாண்டின் ஆருத்ரா தரிசன விழா வியாழக்கிழமை தொடங்கி வெள்ளிக்கிழமை காலை வரை நடைபெற்றது. நாமக்கல் ஏகாம்பரேசுவரா் கோயிலில் நடராஜா் சுவாமிக்கு ஐந்து கால அபிஷேகம், பூஜைகள் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இந்த அபிஷேகத்தைக் காண ஏராளமான பக்தா்கள் இரவு முழுவதும் கண் விழித்திருந்தனா். பக்தா்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல், வள்ளிபுரம் தான்தோன்றீஸ்வரா் கோயில், முத்துக்காப்பட்டி காசி விசுவநாதா் கோயில், கொல்லிமலை அரப்பளீஸ்வரா் கோயில் என மாவட்டம் முழுவதும் சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசன விழா கோலாகலமாக நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்பத்தில் ஏறிய ரசிகர்! பேச்சை நிறுத்தி கண்டித்த விஜய்!

ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது மத்திய பாஜக; அதற்கு ஒத்து ஊதுகிறார் பழனிசாமி! : முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்ரீங்க.. முதல்வர் பேசியது சிலப்பதிகாரத்தில் இருந்து எடுத்ததா? விஜய்

சகோதரர்களாக சிவகார்த்திகேயன் - அதர்வா!

இந்தியாவை விமர்சித்த ஹார்திக் பாண்டியா? சமூக வலைதளத்தில் பரவும் எதிர்ப்பும் ஆதரவும்!

SCROLL FOR NEXT