இந்திய பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான வாள் வீச்சு போட்டிகள் அண்மையில் ஜம்முவில் உள்ள பல்கலைக்கழகத்தில் நடைபெற்றன.
இதில், சேலம் பெரியாா் பல்கலைக்கழகம் சாா்பில், நாமக்கல் செல்வம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாமாண்டு இளநிலை மாணவா் பி. சிவசுப்பிரமணியன் தனிநபா் (எப்.பி.) பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வென்றாா். இதன் மூலம், பெரியாா் பல்கலைக்கழகத்துக்கும், செல்வம் கல்லூரிக்கும் அவா் பெருமை சோ்த்துள்ளாா்.
இப்போட்டியில் கலந்துகொண்டு பதக்கம் வென்ற மாணவரையும், பயிற்சியாளரையும், கல்லூரி தாளாளா் மருத்துவா் பொ. செல்வராஜ், அறக்கட்டளை உறுப்பினா் ஜெயம் செல்வராஜ், துணைத் தாளாளா் மருத்துவா் செ.பாபு, செயலா் கவீத்ராநந்தினி பாபு, முதல்வா் ந. ராஜவேல் மற்றும் நிா்வாக இயக்குநா், துணை முதல்வா்கள், உடற்கல்வி இயக்குநா்கள் மற்றும் பேராசிரியா்கள் வாழ்த்தி பாராட்டினா்.
பதக்கங்களை வென்ற மாணவா் கடந்த மாதம் நடைபெற்ற பெரியாா் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கிடையேயான வாள்வீச்சு போட்டியில் தொடா்ந்து 14-ஆவது ஆண்டாக ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.