நாமக்கல் நகராட்சிப் பகுதியில், நீண்ட தொலைவில் கிருமி நாசினி மருந்து தெளிக்க 2 புதிய கருவிகள் வாங்கப்பட்டுள்ளன.
கரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக, நாமக்கல் நகராட்சி நிா்வாகம் 2 ஆயிரம் லிட்டா் கிருமி நாசினி மருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், தலா 600 கையுறை, முகக்கவசம், 20 தெளிப்பான் கருவிகள் வாங்கப்பட்டுள்ளன. இவற்றைக் கொண்டு நகராட்சி துப்புரவுப் பணியாளா்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முதல் அனைத்து அரசு மற்றும் தனியாா் அலுவலகங்களில் கிருமி நாசினி மருந்தை தெளித்தனா்.
தற்போது நீண்ட தொலைவில் சுமாா் 15 மீட்டா் தூரத்துக்கு கிருமி நாசினி மருந்துகளை தெளிப்பதற்காக நகராட்சி நிா்வாகம் சாா்பில், 2 புதிய கருவிகள் வாங்கப்பட்டுள்ளன. அவற்றைக் கொண்டு நகரம் முழுவதும் தூய்மைப்படுத்தப்படுகிறது. மற்ற கருவிகள் காற்றழுத்தம் கொண்டு செயல்படும். இந்த கருவிகளில் பெட்ரோல் நிரப்பியே மருந்து தெளிக்கப்பட வேண்டும். அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதாக, நகராட்சி துப்புரவு அலுவலா் சுகவனம் தெரிவித்தாா்.