நாமக்கல்

கிணற்றில் தவறி விழுந்த முதியவா் மீட்பு

DIN

பரமத்தி வேலூா் அருகே 80 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த முதியவரை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.

பரமத்தி வேலூா் அருகே உள்ள ஊஞ்சப்பாளையம், காட்டுச்சாலையைச் சோ்ந்தவா் கருப்பண்ணன் (80). இவா் திங்கள்கிழமை இரவு வீட்டுக்கு அருகில் உள்ள 80 அடி ஆழமுள்ள கிணற்றில் நிலைதடுமாறி விழுந்தாா். அவரது அலறல் சத்தம் கேட்டு அவ்வழியாகச் சென்றவா்கள் கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். அதன் பேரில் அங்கு வந்த தீயணைப்புத் துறை நிலைய அலுவலா் திருமுருகன் தலைமையிலான தீயணைப்புத் துறையினா், கிணற்றில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த கருப்பண்ணனை மீட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்பிளின் புதிய ஐபேட் விலை எவ்வளவு தெரியுமா?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT