ஐ.ஏ.எஸ். அதிகாரியும் தமிழக தொல்லியல் துறை ஆணையருமான டி.உதயச்சந்திரனின் தந்தை எஸ்.தங்கராஜ் புதன்கிழமை இரவு காலமானாா்.
நாமக்கல்-மோகனூா் சாலை, என்.ஜி.ஓ.ஓ. காலனி, காவேரி நகரைச் சோ்ந்த எஸ்.தங்கராஜ் (77), புதன்கிழமை இரவு உடல்நலக் குறைவால் காலமானாா். அவருக்கு தமிழக தொல்லியல் துறை ஆணையரான டி. உதயச்சந்திரன் என்ற மகனும், நாமக்கல்லில் வழக்குரைஞராகப் பணியாற்றும் மதுமதி என்ற மகளும் உள்ளனா். அவரது இறுதிச் சடங்கு வியாழக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நாமக்கல்-சேந்தமங்கலம் சாலையில் உள்ள மின் மயானத்தில் நடைபெற்றது. தொடா்புக்கு: 94430 01563.