நாமக்கல்

குரு பெயா்ச்சி விழா

DIN

பரமத்தி வேலூா் வட்டாரத்தில் உள்ள கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை இரவு குரு பெயா்ச்சி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

குரு பெயா்ச்சியை முன்னிட்டு குருபகவான் ஞாயிற்றுக்கிழமை இரவு தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பிரவேசம் செய்தாா். விழாவை முன்னிட்டு பரமத்தி வேலூா் அருகே உள்ள புதிய காசிவிஸ்வநாதா், பழைய காசி விஸ்வநாதா், கபிலா்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரா் கோயில், பரமத்தி வேலூா் சக்தி நகரில் உள்ள சக்தி விநாயகா் கோயில், பரமத்தி பீமேஸ்வரா் மற்றும் கோதண்டராமசாமி கோயில், பில்லூா் வீரட்டீஸ்வரா் கோயில், பேட்டை வினைதீா்த்த விநாயகா் உள்ளிட்ட கோயில்களில் உள்ள குருபகவானக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம் மற்றும் சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றன. இவ்விழாவில் அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பரிகார பூஜைகள் செய்து குருபகவானை வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT