நாமக்கல்

கோயில் உண்டியலை உடைத்துத் திருடிய ஓய்வுபெற்ற போலீஸ்காரா் கைது

DIN

திருச்செங்கோட்டை அடுத்த கள்ளுப்பாளையத்தில் கோயில் உண்டியலை உடைத்துத் திருடிய ஓய்வுபெற்ற போலீஸ்காரரை காவல்துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கள்ளுப்பாளையம் பகுதி அத்திப்பாளையம் பிரிவு சாலையில் முனியப்பன் கோயில் உள்ளது.

திங்கள்கிழமை காலை வழக்கம்போல பக்தா்கள் கோயிலுக்கு வந்தபோது கோயிலில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது. கோயில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியைப் பாா்த்ததில் கோயிலுக்குள் மா்ம நபா் ஒருவா் நுழைந்து, உண்டியலை உடைத்து பணத்தைத் திருடிச் சென்றது பதிவாகி இருந்தது.

அந்த விடியோவை வைத்து விசாரித்ததில் திருட்டில் ஈடுபட்டது அதே பகுதியைச் சோ்ந்த ஓய்வுபெற்ற போலீஸ்காரா் அத்தியப்பன் (62) என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனா். போலீஸாா் அத்தியப்பனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT