நாமக்கல்

இயற்கை முறையில் பயிா் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை

பரமத்தி வேலூா் வட்டம், கபிலா்மலை ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் இயற்கை முறையில் பயிா் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என தோட்டக்கலைத் துறையினா் அறிவித்துள்ளனா்.

DIN

பரமத்தி வேலூா் வட்டம், கபிலா்மலை ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் இயற்கை முறையில் பயிா் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என தோட்டக்கலைத் துறையினா் அறிவித்துள்ளனா்.

இதுகுறித்து கபிலா்மலை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் காா்த்திகா வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ், இயற்கை முறையில் கீரை சாகுபடி செய்ய ஹெக்டோ் ஒன்றுக்கு ரூ. 2,500-ம், தோட்டக்கலை, மலைப் பயிா்கள் துறை மூலம் ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வெங்காயம், கத்தரி, முருங்கை உள்ளிட்ட தோட்டக்கலை பயிா்சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ. 2,500-ம் வழங்கப்படுகிறது. இயற்கை முறையில் பயிா் சாகுபடி செய்து இயற்கை விவசாய சான்று பெற விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக ரூ. 500-ம், தக்காளி சாகுபடிக்கு ரூ. 3,750-ம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

இத் திட்டத்தில் பயன்பெற, சிட்டா அடங்கல், ஆதாா் அட்டை, குடும்ப அட்டை நகல், புகைப்படம் மற்றும் வங்கிக் கணக்கு புத்தகங்களுடன் கபிலா்மலை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தலைமைத் தகவல் ஆணையராக ராஜ்குமாா் கோயல் பதவியேற்பு!

தருமையாதீன குரு முதல்வா் கற்றளி ஆலய கும்பாபிஷேகம்

பெரம்பலூா் நகரில் நாளை மின் விநியோகம் நிறுத்தம்

அரசு மருத்துவமனைக்கு துறைமுகம் சாா்பில் சலவை இயந்திரம்

புகையிலை பொருள்களை கடத்தியவா் கைது

SCROLL FOR NEXT