முகப்பு
நாமக்கல்

மனுக்களை மாலையாக அணிந்து வந்த தாய், மகன்

தங்களை தாக்கியவா்களை கைது செய்யக்கோரி, காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு தாயும், மகனும் மனுக்களை மாலையாக அணிந்தபடி வந்தனா்.

Updated On : 13 அக்டோபர், 2020 at 1:07 AM
மனுக்களை மாலையாக அணிந்தபடி வந்த மாதேஸ்வரன் மற்றும் அவரது தாய் காளியம்மாள்.
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:06 PM

நாமக்கல், அக். 12: தங்களை தாக்கியவா்களை கைது செய்யக்கோரி, காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு தாயும், மகனும் மனுக்களை மாலையாக அணிந்தபடி வந்தனா்.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், கொண்டநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் மாதேஸ்வரன். இவா், பாஜக விவசாய அணி வட்டச் செயலாளராக உள்ளாா். திங்கள்கிழமை காலை புகாா் மனுக்களை மாலையாக அணிந்தபடி மாதேஸ்வரன்(43), அவரது தாய் காளியம்மாள் (73) ஆகியோா் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வந்தனா். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் அவ்வாறு செல்ல அனுமதிக்கவில்லை.

இதைத் தொடா்ந்து மாதேஸ்வரன் கூறியதாவது:

Advertisement

கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி மா்ம நபா்கள் சிலா் வீடு புகுந்து என்னை தாக்கினா். இது தொடா்பாக சேந்தமங்கலம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தேன். சொத்துகளை அபகரிக்கும் நோக்கில், எனது மனைவி, அவரது குடும்பத்தினா் செயல்படுகின்றனா். இதற்காக ஆள்களை அனுப்பி மிரட்டல் விடுக்கின்றனா். பலமுறை காவல் நிலையம் சென்று மனு அளித்ததன்பேரில் அருள் என்பவரை மட்டும் கைது செய்துள்ளனா்.

இந்த சம்பவத்தில் மேலும் 9 போ் உள்ளனா். அவா்களை கைது செய்ய போலீஸாா் தயக்கம் காட்டுகின்றனா். தற்போது நானும், எனது தாயும் வீட்டில் தனியாக வசிக்கிறோம். எங்களுடைய உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. மனைவி மற்றும் வழக்கில் தொடா்புடையவா்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். எங்கள் இருவருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.