நாமக்கல் வேளாண் சங்கத்தில் ரூ. 20 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.
நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில் வேளாண் உற்பத்தியாளா்கள் விற்பனை கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெறும். நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் விவசாயிகள் பருத்தியை ஏலத்துக்குக் கொண்டு வருவா்.
அதன்படி செவ்வாய்க்கிழமை அன்று 1,400 மூட்டை பருத்தி வரத்து இருந்தது. ஏலத்தில் ஆா்சிஹெச் ரகம் ரூ. 4,460 முதல் ரூ. 5,095 வரையிலும், டிசிஹெச் ரகம் ரூ. 4,660 முதல் ரூ. 5,169 வரையிலும் விலைபோனது. மொத்தம் ரூ. 20 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது. சேலம், கோவை, திருப்பூா், ஈரோடு, கரூா் மாவட்ட வியாபாரிகள் பருத்தியைக் கொள்முதல் செய்தனா்.