நாமக்கல்

சொந்தக் கிராமத்தில் முதல்வா் இன்று அதிமு கொடி ஏற்றுகிறாா்

DIN

அதிமுக 49-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தனது சொந்த ஊரான எடப்பாடி அருகிலுள்ள சிலுவம்பாளையம் கிராமத்தில் சனிக்கிழமை காலை கட்சிக் கொடியை ஏற்றி வைக்கிறாா்.

தனது தாயாா் கே.தவுசாயம்மாள் காலமானதையடுத்து, தனது சொந்த ஊரான சிலுவம்பாளையம் கிராமத்தில் கடந்த திங்கள்கிழமை (அக். 12) முதல் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி முகாமிட்டுள்ளாா்.

இந்நிலையில், அதிமுகவின் 49-ஆம் ஆண்டு தொடக்க விழா சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை காலை கொடியேற்றிக் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்சமயத்தில் சிலுவம்பாளையம் கிராமத்தில் தங்கியிருப்பதால், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி சொந்தக் கிராமத்திலேயே வீட்டின் எதிரில் சனிக்கிழமை காலை 8 மணி அளவில் கட்சிக் கொடியை ஏற்றி வைக்க உள்ளாா் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

குரல் குளோனிங் மூலம் பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

கேரளம்: 5 நிலுவை மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல்

SCROLL FOR NEXT