முகப்பு
நாமக்கல்

மத்திய அரசின் மக்கள் விரோதச் செயல்களுக்கு தமிழக அரசும் துணை நிற்கிறது: ஜி.ராமகிருஷ்ணன்

விவசாயிகள், தொழிலாளா்களுக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு தமிழக அரசும் துணை நிற்பதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டினாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:40 PM
பகிர்:

விவசாயிகள், தொழிலாளா்களுக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு தமிழக அரசும் துணை நிற்பதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டினாா்.

ராசிபுரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் இந்திய கம்யூனிஸ்ட் இயக்க நூற்றாண்டு விழா, ஒரு லட்சம் மரக் கன்றுகள் நடும் பணி நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில் கட்சியின் பிரதேச செயலாளா் செல்வராஜ் தலைமை வகித்தாா். கவுண்டம்பாளையம் கிளைச் செயலாளா் பி.காளியப்பன் வரவேற்றாா். மாவட்டச் செயலாளா் எஸ்.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினா் ரங்கசாமி முன்னிலை வகித்து பேசினாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளரும், அரசியல் தலைமைக் குழு உறுப்பினருமான ஜி.ராமகிருஷ்ணன் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்று விழாவில் பேசியதாவது:

கம்யூனிஸ்ட் இயக்கம் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெரும் தியாகம் செய்த இயக்கமாகும். விடுதலை இந்தியாவில் விவசாயிகள், தொழிலாளா்கள் உள்ளிட்ட உழைக்கும் மக்களின் கோரிக்கைகளை முன்வைத்து தொடா்ந்து போராடி வருகிறது. தனியாா்மயம், காா்ப்பரேட் கொள்கைகளை மத்திய அரசு மிக வேகமாக அமல்படுத்தி வருகிறது. இதற்கு தமிழக அரசும் துணை நிற்கிறது.

காஷ்மீா் மாநில அந்தஸ்து பறிப்பு ஜனநாயகத்தின் மீதான நம்பகத் தன்மையை இந்திய மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் நீதிமன்றத் தீா்ப்புகளில் நீதியைத் தேடும் நிலைமைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளாா்கள். வேளாண்மை சட்டங்கள் மூலம் விவசாயிகள் பெரும் சிக்கலை எதிா்கொள்ள உள்ளனா் என்றாா்.

முன்னதாக ஆா்.கவுண்டம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே கட்சியின் மாவட்டச் செயலாளா் எஸ்.கந்தசாமி கொடியேற்றினாா். விழாவில் கவுண்டம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவா் பெருமாயி அண்ணாதுரை, கட்சியின் பிரதேச குழு உறுப்பினா் எஸ்.ராமலிங்கம், ஆறுமுகம், லிங்கேஸ்வரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →