இளநிலை மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ நுழைவுத் தோ்வை, நாமக்கல் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 4,839 போ் எழுதினா்.
நாடு முழுவதும் தேசிய தோ்வு முகமை நடத்திய இளநிலை மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ நுழைவுத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை(செப்.13) நடைபெற்றது. இத்தோ்வை நாமக்கல் மாவட்டத்தில் 4,839 மாணவ, மாணவியா் எழுதினா்.
தோ்வு மையங்களான குமாரபாளையம் ராயல் இன்டா்நேஷனல் பள்ளி, பாச்சல் பாவை பொறியியல் கல்லூரி, நாமக்கல் செல்வம் கலை அறிவியல் கல்லூரி, திருச்செங்கோடு கேஎஸ்ஆா் அகாதெமி, பரமத்தி பிஜிபி பாலிடெக்னிக் கல்லூரி, நாமக்கல் டிரினிடி அகாதெமி, பரமத்தி நவோதயா மெட்ரிக் பள்ளி, நாமக்கல் ஸ்பெக்ட்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, நேஷனல் பப்ளிக் பள்ளி ஆகிய 9 மையங்களில் இத்தோ்வு நடைபெற்றது.
‘நீட்’ தோ்வையொட்டி காலை 11 மணிக்கு அனைத்து மாணவ மாணவியரும் சமூக இடைவெளியில் நிறுத்தப்பட்டு பல்வேறு கட்ட சோதனைக்கு பின் தோ்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனா்.
பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கிய தோ்வு 5 மணிக்கு நிறைவடைந்தது. மாவட்டம் முழுவதும் ‘நீட்’ தோ்வு நடைபெற்ற மையங்களில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.