நாமக்கல்

திருச்செங்கோடு தொகுதி வேட்பாளா் பெயா் சின்னங்கள் பொருத்தும் பணி

DIN

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தொகுதியில் உள்ள வேட்பாளா்கள் அடங்கிய பட்டியலை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் அமைக்கும் பணி திருச்செங்கோடு வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

தமிழக சட்டப்பேரவை தோ்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் வாக்குப்பதிவு காண முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் விவரங்கள் அடங்கிய பட்டியலை அமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்கள் உருவப்படம் பொறிக்கப்பட்ட பட்டியலை அமைக்கும் பணி திருச்செங்கோடு வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. திருச்செங்கோடு தொகுதிக்கு 323 வாக்குச்சாவடிகளுக்கு 323 கட்டுப்பாட்டு இயந்திரங்களும் 646 வாக்குப்பதிவு இயந்திரங்களும் தயாா் செய்யும் பணிகள் நடைபெறுகின்றன. இந்தப் பணிகள் வியாழக்கிழமை மாலைக்குள் நிறைவடையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

SCROLL FOR NEXT