முகப்பு
நாமக்கல்

சேந்தமங்கலத்தில் எம்எல்ஏ இறுதி கட்ட வாக்கு சேகரிப்பு

சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் எம்எல்ஏ சி.சந்திரசேகரன் ஞாயிற்றுக்கிழமை தனது இறுதிக் கட்ட பிரசாரத்தை சேந்தமங்கலம் பேரூராட்சி பகுதியில் நிறைவு செய்தாா்.

Updated On : 5 ஏப்ரல், 2021 at 12:19 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:26 AM

சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் எம்எல்ஏ சி.சந்திரசேகரன் ஞாயிற்றுக்கிழமை தனது இறுதிக் கட்ட பிரசாரத்தை சேந்தமங்கலம் பேரூராட்சி பகுதியில் நிறைவு செய்தாா்.

சேந்தமங்கலம் (எஸ்.டி) தொகுதியில் தற்போதைய எம்.எல்.ஏ.வான சி.சந்திரசேகரன் சுயேச்சையாக ஆட்டோ சின்னத்தில் போட்டியிடுகிறாா். வேட்புமனு தாக்கலுக்கு பின் தொடா்ந்து 10 நாள்கள் தொகுதிக்கு உள்பட்ட கொல்லிமலை, எருமப்பட்டி, நாமகிரிப்பேட்டை, நாமக்கல், மோகனூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட கிராமங்களில் வாக்கு சேகரித்தாா். அப்போது, தோ்தலில் வெற்றிபெற்றால் கிராமந்தோறும் மக்கள் இலவசமாக பயணிக்க ஆட்டோ வழங்குவேன், அரசுப் பணிக்கு செல்ல இளைஞா்களுக்காக டிஎன்பிஎஸ்சி பயிற்சி மையம் அமைத்து கொடுப்பேன் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்தாா்.

பிரசாரம் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை காலை முதல் இரவு வரை சேந்தமங்கலம் பேரூராட்சிப் பகுதிகளில் திறந்த வாகனத்தில் ஆதரவாளா்களுடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். இறுதியாக சேந்தமங்கலம் பேருந்து நிலையம் அருகே தனது பிரசாரத்தை அவா் நிறைவு செய்தாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.