பதற்ற வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி
நாமக்கல் மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் 1,028 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் 1,028 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
சட்டப்பேரவைத் தோ்தல் செவ்வாய்க்கிழமை நடைபெறுவதையொட்டி, அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை தோ்தல் அதிகாரிகள் தீவிரமாக செய்து வருகின்றனா்.
நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்திவேலூா், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 தொகுதிகளில் மொத்தம் 2,049 வாக்குச்சாவடிகள் உள்ளன. இவற்றில் 215 சாவடிகள் மிகவும் பதற்றமானவாக்குச்சாவடிகளாகவும், 813 சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, ஆட்சியா் அலுவலகம், காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் இருந்து அதிகாரிகள் நேரடியாக கண்காணிக்கும் வகையிலான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதர வாக்குச்சாவடிகளில் விடியோ பதிவும், மடிக்கணினி மூலம் வாக்காளா்கள் முகத்தை பதிவு செய்தல் உள்ளிட்டவையும் நடைபெற உள்ளது.
Advertisement
நாமக்கல் நகராட்சிப் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணியை தனியாா் நிறுவனத்தினா் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டனா்.