நாமக்கல்

சிலம்பொலி சு.செல்லப்பன் நினைவு தினம் அனுசரிப்பு

DIN

நாமக்கல்லில் மறைந்த தமிழறிஞா் சிலம்பொலி சு.செல்லப்பன் நினைவு தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.

நாமக்கல் அருகே சிவியாம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த தமிழறிஞா் சிலம்பொலி சு.செல்லப்பன், 2019 ஏப்.6-இல் காலமானாா். அவரது இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சிவியாம்பாளையத்தில் உள்ள இல்லத்தில் மலா்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சிலம்பொலியாா் உருவப் படத்துக்கு அவரது மகள் கெளதமி ராமலிங்கம் மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.

மேலும் குடும்ப உறுப்பினா்கள், உறவினா்கள் பலரும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினா். இதேபோல மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற அவரது நினைவு தின நிகழ்ச்சியில் தமிழறிஞா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT