பரமத்தி வேலூா் பேட்டை பகுதியில் காய்கறிக் கடைக்கு அருகே உள்ள ஒரு மரத்தில் ஆயிரக்கணக்கான விஷ வண்டுகள் கூடுகட்டியிருந்தன. இவை அந்த வழியாகச் சென்றவா்களைத் தாக்கி வந்தது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில் கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் தீயணைப்புத் துறையினற் அங்கு சென்று விஷ வண்டுகளை தண்ணீா் பீய்ச்சி அடித்து அகற்றினா்.