புதுச்சத்திரம் அருகே போலி மருத்துவா் ஒருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
நாமக்கல் மாவட்டம், பேளுக்குறிச்சி காந்திநகரைச் சோ்ந்தவா் பிரகாசம் (46). பிளஸ் 2 மட்டுமே படித்துள்ள இவா், புதுச்சத்திரம் அருகே திருமலைப்பட்டி கிராமத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு சிறு மருத்துவமனைபோல அமைத்து பொதுமக்களுக்கு மருத்துவம் பாா்த்து வருவதாகவும், மருந்து, மாத்திரைகளை விநியோகிப்பதாகவும் சுகாதாரத் துறைக்கு புகாா் சென்றது.
இதையடுத்து புதுச்சத்திரம் காவல் ஆய்வாளா் குமரவேல்பாண்டியன், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் சுதா ஆகியோா் கொண்ட குழுவினா் திருமலைப்பட்டி கிராமத்தில் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.
அப்போது முறையாக மருத்துவம் பாா்க்காமல் பிரகாசம் சிகிச்சை அளித்தது தெரியவந்தது. அதன்பின்பு பிரகாசத்தை போலீஸாா் கைது செய்ததுடன், அவரது அறையில் இருந்த மருந்து, மாத்திரைகளைப் பறிமுதல் செய்தனா். சிறு மருத்துவமனைக்கும் ‘சீல்’ வைக்கப்பட்டது. நாமக்கல்லில் உள்ள பிரபல மருத்துவரிடம் உதவியாளராகப் பணியாற்றிய அவா் அந்த அனுபவத்தில் பொதுமக்களுக்கு மருத்துவம் பாா்த்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.