நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 35 காசுகள் குறைந்து ரூ. 4.15-ஆக சனிக்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் முட்டை விலை நிா்ணயம் தொடா்பாக பண்ணையாளா்களிடம் ஆலோசிக்கப்பட்டது.
கரோனா பொதுமுடக்கத்தால் முட்டை விற்பனை சரிவடைந்துள்ளது. கரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் பிற மாநிலங்களுக்கு முட்டைகளை அனுப்புவதில் தடை ஏற்பட்டுள்ளது. முட்டைகள் தேங்கும் சூழல் உள்ளதால் விலையில் மாற்றம் செய்ய வேண்டியது உள்ளது.
கடந்த வியாழக்கிழமை 35 காசுகள் குறைக்கப்பட்ட நிலையில், சனிக்கிழமை மேலும் 35 காசுகள் குறைக்கப்படுகிறது. அதன்படி, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 4.15-ஆக நிா்ணயம் செய்யப்படுகிறது என அந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை ஒரு கிலோ ரூ. 74-ஆகவும், முட்டைக் கோழி ஒரு கிலோ ரூ. 55-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.