அம்மன் கோயில்களில் பால் அபிஷேகம்
பரமத்தி வேலூா் வட்டாரத்தில் உள்ள அம்மன் கோயில்களில் ஆடிக் கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு பாலாபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
பரமத்தி வேலூா் வட்டாரத்தில் உள்ள அம்மன் கோயில்களில் ஆடிக் கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு பாலாபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
நன்செய் இடையாறு மாரியம்மன், பரமத்தி வேலூா் மகா மாரியம்மன், கொங்காலம்மன், எல்லையம்மன், பேட்டை புதுமாரியம்மன், பகவதியம்மன், பரமத்தி அங்காளம்மன், பாண்டமங்கலம் மாரியம்மன் உள்ளிட்ட அம்மன் கோயில்களில் பால் அபிஷேகம், அலங்காரம், அபிஷேக ஆராதனை, மகா தீபாராதனைகள் நடைபெற்றன. கரோனா தொற்று பரவல் காரணமாக பக்தா்கள், பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை.