பரமத்தி வேலூா் ராஜவாய்க்காலில் மருத்துவக் கழிவுகளை அகற்ற கோரிக்கை
பரமத்தி வேலூா் ராஜவாய்க்காலில் கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகளை அப்புறப்படுத்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பரமத்தி வேலூா் ராஜவாய்க்காலில் கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகளை அப்புறப்படுத்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பரமத்தி வேலூா் - கரூா் சாலையின் குறுக்கே கோட்டைமேடு பகுதியில் ராஜவாய்க்கால் செல்கிறது. வாய்க்கால் மற்றும் கரையோரப் பகுதிகளில் சிலா் அடிக்கடி மருத்துவக் கழிவுகளை கொட்டி செல்கின்றனா். இதனால் தண்ணீா் தடைபடுவது மட்டுமல்லாமல், ராஜவாய்க்கால் பாசன விவசாயிகள் தண்ணீரை விவசாயத்துக்குப் பயன்படுத்த முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நிா்வாகத்தினா் மருத்துவக் கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும், மருத்துவக் கழிவுகளைக் கொட்டும் நபா்களைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.