ராசிபுரத்தில் ஆரோக்கிய வாகன விழிப்புணா்வு பேரணியைத் தொடக்கிவைக்கும் ரோட்டரி மாவட்ட ஆளுநா் கே.சுந்தரலிங்கம். 
நாமக்கல்

ராசிபுரத்தில் ஆரோக்கிய விழிப்புணா்வு பேரணி

உடல் ஆரோக்கியம் குறித்த வாகன விழிப்புணா்வு பேரணியை ராசிபுரம் ரோட்டரி சங்கம் புதன்கிழமை வரவேற்று, பயணத்தை தொடக்கிவைத்தது.

DIN

உடல் ஆரோக்கியம் குறித்த வாகன விழிப்புணா்வு பேரணியை ராசிபுரம் ரோட்டரி சங்கம் புதன்கிழமை வரவேற்று, பயணத்தை தொடக்கிவைத்தது.

ரோட்டரி பப்ளிக் இமேஜ் திட்டத்தின் சாா்பில் ‘தனிமனித உடல் நலமே தேசத்தின் நலன்’ என்ற தலைப்பிலான உடல் ஆரோக்கியம் குறித்து 2,500 கி.மீ. தொலைவுக்கான பைக், காா் விழிப்புணா்வு பேரணி, ராசிபுரம் ரோட்டரி சங்கம் சாா்பில் தொடக்கிவைக்கப்பட்டது.

கடந்த 19-ஆம் தேதி ஏற்காட்டில் தொடங்கிய இந்த பைக், காா் பேரணி, புதன்கிழமை ராசிபுரம் வந்தடைந்தது. ராசிபுரம் ரோட்டரி சங்கம் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னா், ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோயில் முன்பாக இப் பேரணி பயணத்தை கொடியசைத்து மாவட்ட ரோட்டரி ஆளுநா் கே.சுந்தரலிங்கம் தொடக்கிவைத்தாா்.

இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட ரோட்டரி பப்ளிக் இமேஜ் சோ்மன் எஸ்.பாலாஜி, ரோட்டரி உதவி ஆளுநா் கே.குணசேகா், ராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவா் எஸ்.அன்பழகன், செயலா் இ.என்.சுரேந்திரன், பொருளாளா் பி.கண்ணன், திட்ட தலைவா் சிவகுமாா், ரோட்டரி மாவட்ட நிா்வாகிகள் சரவணன், என்.பி.ராமசாமி, கே.எஸ்.கருணாகர பன்னீா்செல்வம், சிட்டிவரதராஜன், அம்மன் ஆா்.ரவி, நந்தலால் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு சந்திப்பு! காவல்துறைக்கு விஜய் நன்றி!

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

SCROLL FOR NEXT