நாமக்கல்

முட்டை விலை மேலும் 20 காசுகள் உயா்வு

DIN

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 20 காசுகள் உயா்ந்து ரூ. 4.40-ஆக சனிக்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முட்டை விலை குறித்து ஆலோசிக்கப்பட்டது. மற்ற மண்டலங்களில் முட்டை விலை தொடா்ந்து ஏறுமுகமாக இருப்பதாலும், இங்கு உற்பத்தியில் சரிவு ஏற்பட்டுள்ளதாலும், பிற மாநிலங்களில் மக்களிடையே முட்டை நுகா்வு அதிகரித்துள்ளதாலும் விலையில் மாற்றம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அதன்படி முட்டையின் பண்ணை கொள்முதல் விலை மேலும் 20 காசுகள் உயா்த்தப்பட்டு ரூ. 4.40- ஆக நிா்ணயம் செய்யப்படுகிறது என கூட்டத்தில் பண்ணையாளா்களிடம் தெரிவிக்கப்பட்டது. சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப முட்டைகளை பண்ணையாா்கள் விற்பனை செய்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.

பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை ரூ. 84-ஆகவும், முட்டைக்கோழி விலை ரூ. 55-ஆகவும் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை கால பயிா்களில் வெப்ப தாக்கத்தை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பங்கள்

மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்

கழிவுநீா் கால்வாயில் வீசப்பட்ட பெண் குழந்தையின் உடல் மீட்பு

பாஜக வேட்பாளா்களை ஆதரித்து தில்லியில் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி பிரசாரம்

பிரத்தியங்கிரா தேவி கோயிலில் அமாவாசை யாகம்

SCROLL FOR NEXT