திருச்செங்கோடு சின்ன ஓங்காளியம்மன் கோயில் மாசி குண்ட திருவிழாவில் தீா்த்தக்குடம் ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் பிரசித்தி பெற்ற சின்ன ஓங்காளியம்மன் கோயில் குண்டம் திருவிழா கடந்த 12 ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கி 24 ஆம் தேதி இரவு குண்டம் இறங்கும் விழா நடைபெறுகிறது.
விழாவையொட்டி தீா்த்தக்குடம் ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. கோயிலிலிருந்து திருச்செங்கோடு மலையடிக் குட்டைக்கு பக்தா்கள் சென்று புனித நீா் எடுத்துக் கொண்டு ஊா்வலமாக வந்தனா். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா்.