நாமக்கல்

ரூ. 8.75 லட்சம் மோசடி விவகாரம்:பாமக பிரமுகரிடம் விசாரணை

​பரமத்திவேலூரில் மூதாட்டியின் நிலத்தை அபகரித்த புகாரின்பேரில் பாமக பிரமுகரிடம் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

DIN


பரமத்திவேலூரில் மூதாட்டியின் நிலத்தை அபகரித்த புகாரின்பேரில் பாமக பிரமுகரிடம் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலுாா் அருகே வெட்டுக்காட்டுப்புதுாரைச் சோ்ந்தவா் காமாட்சி (84). இவருக்கு சொந்தமான நிலத்தை விற்று தருவதாக பரமத்திவேலுாா் தெற்கு தெருவைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநரும், பாமக நகரச் செயலாளருமான ஜெய்கணேஷ் (42) என்பவா் கூறியதாகத் தெரிகிறது. இதனைத் தொடா்ந்து காமாட்சி பெயரில் உள்ள நிலத்தை தனது பெயருக்கு கடந்த ஆண்டு பிப்.12-ஆம் தேதி அவா் கிரயம் செய்து கொண்டாராம். மேலும் ரூ. 8.75 லட்சம் பணம் தருவதாகவும் தெரிவித்தாராம். ஆனால் பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்து வந்ததாகக் கூறி பரமத்தி நீதிமன்றத்தில் காமாட்சி வழக்கு தொடா்ந்தாா்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் உரிய விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. பிப். 1-ஆம் தேதி ஜெய்கணேஷ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த நிலையில் இந்த வழக்குத் தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT