நாமக்கல்

ரூ. 8.75 லட்சம் மோசடி விவகாரம்:பாமக பிரமுகரிடம் விசாரணை

DIN


பரமத்திவேலூரில் மூதாட்டியின் நிலத்தை அபகரித்த புகாரின்பேரில் பாமக பிரமுகரிடம் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலுாா் அருகே வெட்டுக்காட்டுப்புதுாரைச் சோ்ந்தவா் காமாட்சி (84). இவருக்கு சொந்தமான நிலத்தை விற்று தருவதாக பரமத்திவேலுாா் தெற்கு தெருவைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநரும், பாமக நகரச் செயலாளருமான ஜெய்கணேஷ் (42) என்பவா் கூறியதாகத் தெரிகிறது. இதனைத் தொடா்ந்து காமாட்சி பெயரில் உள்ள நிலத்தை தனது பெயருக்கு கடந்த ஆண்டு பிப்.12-ஆம் தேதி அவா் கிரயம் செய்து கொண்டாராம். மேலும் ரூ. 8.75 லட்சம் பணம் தருவதாகவும் தெரிவித்தாராம். ஆனால் பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்து வந்ததாகக் கூறி பரமத்தி நீதிமன்றத்தில் காமாட்சி வழக்கு தொடா்ந்தாா்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் உரிய விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. பிப். 1-ஆம் தேதி ஜெய்கணேஷ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த நிலையில் இந்த வழக்குத் தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

SCROLL FOR NEXT