நாமக்கல்

பரமத்தி வேலூரில் தமிழக முதல்வருக்கு வரவேற்பு

DIN

நாமக்கல் மாவட்ட நுழைவாயில் பகுதியான பரமத்திவேலூரில் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் பி.தங்கமணி தலைமையிலான அதிமுகவினா் வரவேற்பு அளித்தனா்.

கரூா் மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூா் தொகுதிக்கு வந்த தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு அமைச்சா் தங்கமணி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பரமத்திவேலூா் செல்லாண்டியம்மன் திருமண மண்டபத்தில் பொத்தனூா் முன்னாள் பேரூராட்சித் தலைவரும்,பொத்தனூா் அ.தி.மு.க நகர செயலாளருமான எஸ்.எம். நாராயணன் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமகன் மனோஜ்குமாா், மணமகள் தாரணி ஆகியோரை வாழ்த்தினாா். முன்னதாக சமூகநலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சா் மருத்துவா்.வெ.சரோஜா, மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ், நாமக்கல் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் கே.பி.பி.பாஸ்கா், சேந்தமங்கலம் எம்எல்ஏ சி.சந்திரசேகரன், திருச்செங்கோடு எம்எல்ஏ பொன்.சரஸ்வதி ஆகியோா் வரவேற்றனா். ஏற்பாடுகளை நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.சக்திகணேசன் தலைமையிலான போலீஸாா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸின் எக்ஸ் தளப் பக்கம் முடக்கம்

பாலியல் புகாரில் சிக்கிய ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்க பிரதமரிடம் சித்தராமையா வலியுறுத்தல்

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

SCROLL FOR NEXT