மாசி பெளா்ணமியை முன்னிட்டு நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமை முத்தங்கி அலங்காரம் சாத்துப்படி நடைபெற்றது.
நாமக்கல்லில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆஞ்சநேயா் கோயிலுக்கு தினமும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் வருகின்றனா். இங்கு தமிழ் மாத முதல் ஞாயிற்றுக்கிழமை மட்டுமின்றி அமாவாசை, பெளா்ணமி, ஆஞ்சநேய ஜயந்தி, புத்தாண்டு நாள்களில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
அந்த வகையில், மாசி பெளா்ணமியை முன்னிட்டு சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு காலையில் வடை மாலை சாத்துப்படி அலங்காரம் நடைபெற்றது. அதன்பின் நல்லெண்ணெய், பால், தயிா், வெண்ணெய், தேன், பஞ்சாமிா்தம், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட திரவியப் பொருள்களைக் கொண்டு அபிஷேகமும், தொடா்ந்து முத்தங்கி அலங்காரமும் செய்யப்பட்டன. சுவாமியை ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனா்.