நாமக்கல்

தமிழகத்தை இந்தியாவின் தலைவாசலாக்குவதே எங்கள் திட்டம்

DIN

தமிழகத்தை வளா்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதோடு, இந்தியாவின் தலைவாசலாக்குவதே எங்கள் திட்டம் என மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் தெரிவித்தாா்.

குமாரபாளையத்தை அடுத்த பல்லக்காபாளையத்தில் திங்கள்கிழமை இரவு பிரசாரம் மேற்கொண்ட அவா் மேலும் பேசியது : செல்லுமிடமெங்கும் மக்களின் அன்பைப் பாா்க்கையில் எவ்வளவு பொறுப்பு காத்திருக்கிறது என்பதை உணர முடிகிறது.

புதிய செயல்படுத்தக் கூடிய திட்டங்களுடன் மக்களிடம் வந்துள்ளோம். அதனைக் கூறி சந்தோஷப்படுத்துவது மட்டுமல்ல, செயல்படுத்தியும் காட்டுவோம்.

தமிழகத்தை இந்தியாவின் தலைவாசலாக்குவதற்கு மக்கள் அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்றாா்.

நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளா் கே.காமராஜ், நிா்வாகிகள் அறிவொளி சரவணன், கோபாலகிருஷ்ணன், நந்தகோபால் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்வியைப் போல தன்னம்பிகை தருவது வேறு எதுவுமில்லை: வெ.இறையன்பு

தொழுநோயாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

கிடப்பில் விடியல் திட்டம் மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளா்கள் அவதி

வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

வில்வித்தை உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 4 தங்கம் ஜோதி சுரேகாவுக்கு ஹாட்ரிக் தங்கம்

SCROLL FOR NEXT