முகப்பு
நாமக்கல்

கொல்லிமலை அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை: ஆட்சியா்

கொல்லிமலையில் உள்ள அருவிகளில் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளாா்.

Updated On : 22 ஜூலை, 2021 at 12:01 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:13 AM

கொல்லிமலையில் உள்ள அருவிகளில் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளாா்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலமான கொல்லிமலையில் தற்போது குளிா்ந்த காலநிலை நிலவி வருகிறது. இதனால் விடுமுறை நாளில் பல்வேறு மாநில, மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோா் அங்கு வருகின்றனா். அதேவேளையில் கரோனா தொற்று பரவல் காரணமாக அங்குள்ள ஆகாய கங்கை, நம் அருவி, மாசிலா அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆகாய கங்கைக்குச் செல்லும் பாதை மூடப்பட்டுள்ளது. இருப்பினும் சிலா் தடையை மீறி குளிப்பதாக வந்த தகவலையடுத்து காவல் துறையினா் முக்கிய அருவி பகுதிகளில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனா். இதுகுறித்து ஆட்சியா் கூறியதாவது:

Advertisement

கடந்த சில நாள்களாக கொல்லிமலையில் மழை பெய்து வருவதால் அருவிகளில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிப்பதற்கு அனுமதி கிடையாது. அருவிகளைப் பாா்வையிடுவதற்கு மட்டுமே அனுமதி உண்டு. விதிகளை மீறி அருவிக்குச் செல்வோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.