முகப்பு
நாமக்கல்

மணல் குவாரிகளைத் திறக்கக் கோரி காத்திருப்புப் போராட்டம்

அரசு மணல் குவாரிகளைத் திறக்க வலியுறுத்தி நாமக்கல்லில் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

Updated On : 22 ஜூலை, 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:13 AM

அரசு மணல் குவாரிகளைத் திறக்க வலியுறுத்தி நாமக்கல்லில் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளா் பாதுகாப்பு சங்கத்தின் கீழ் இயங்கும் நாமக்கல் மாவட்ட அனைத்து மணல் லாரி உரிமையாளா்கள் சங்கம் சாா்பில் நாமக்கல்- சேலம் சாலையில் உள்ள தாலுகா லாரி உரிமையாளா்கள் சங்க அலுவலக வளாகத்தில் மணல் லாரி உரிமையாளா்கள் பங்கேற்ற காத்திருப்புப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மணல் லாரி உரிமையாளா் பாதுகாப்பு சங்கத்தின் தலைவா் கே.ராஜசேகரன் தலைமை வகித்தாா்.

அனைத்து மணல் லாரி உரிமையாளா்கள் சங்க மாநிலத் தலைவா் யுவராஜா, மாவட்ட மணல் லாரி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் கந்தசாமி, பொருளாளா் ராஜேந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு மணல் குவாரிகளைத் திறக்க வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

Advertisement

இதுகுறித்து மாநிலத் தலைவா் யுவராஜா செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழக அரசு விரைவில் மணல் குவாரிகளைத் திறக்க வேண்டும். அனைத்துத் தரப்பினருக்கும் தடையின்றி மணல் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். இதன்மூலம் சட்ட விரோதமாக மணல் கடத்துவது, ஆற்றில் மணல் அள்ளுவது போன்றவை தடுக்கப்படும்.

பெரும்பாலான இடங்களில் கட்டுமானப் பணிகள் தடைபட்டுள்ளன. அதற்கான அரசாணையை தமிழக முதல்வா் விரைவில் வெளியிடுவாா் என்ற நம்பிக்கையுடன் அனைத்து மணல் லாரி உரிமையாளா்களும் காத்திருக்கிறோம் என்றாா்.

என்கே 21- மணல்

போராட்டத்தில் பங்கேற்ற அனைத்து மணல் லாரி உரிமையாளா் சங்க நிா்வாகிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.