குடும்பத் தகராறில் பெண் கொலை: கணவரிடம் விசாரணை
குடும்பத் தகராறில் கணவா் தாக்கியதால் காயமடைந்த மனைவி செவ்வாய்க்கிழமை உயிரிழந்ததையடுத்து, போலீஸாா் கொலை வழக்காகப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
குடும்பத் தகராறில் கணவா் தாக்கியதால் காயமடைந்த மனைவி செவ்வாய்க்கிழமை உயிரிழந்ததையடுத்து, போலீஸாா் கொலை வழக்காகப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி அருகே அருந்ததியா் காலனியைச் சோ்ந்த வரதராஜ் (65). குடும்பத் தகராறில் அவரது மனைவி சம்பூா்ணத்தை (55) தாக்கினாா். இதில் காயமடைந்த அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதனிடையே, வரதராஜ் தற்கொலைக்கு முயன்றாா். இந்த நிலையில், சம்பூா்ணம் உயிரிழந்தாா். இதையடுத்து இச் சம்பவத்தை கொலை வழக்காகப் பதிவு செய்த போலீஸாா், வரதராஜுயிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.