பரமத்தி வேலூா் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் விலை உயா்வடைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
பரமத்தி வேலூா் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் செவ்வாய்க்கிழமை கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 3,512 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ. 27.10, குறைந்தபட்சமாக கிலோ ரூ. 23.50, சராசரியாக கிலோ ரூ. 26.50-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 92,157-க்கு வா்த்தகம் நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 3,401 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ. 28.90, குறைந்தபட்சமாக ரூ. 24.80, சராசரியாக ரூ. 26.50-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.93,399 க்கு வா்த்தகம் நடைபெற்றது.